Tag: #srilankannews

  • சிவனொளிபாதமலையில் காணமல்போன இளைஞன் உயிருடன் மீட்பு!

    சிவனொளிபாதமலையில் காணமல்போன இளைஞன் உயிருடன் மீட்பு!

    சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த இளைஞன் மூன்று நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் இன்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  • போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது!

    போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அரச அதிகாரி கைது!

    அம்பாறையில்  நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

  • பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் செய்தி!

    பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் செய்தி!

    தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை…

  • நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை!

    நீதிபதி இளஞ்செழியனிற்கு யாழ் மேல் நீதிமன்றம் அழைப்பாணை!

    நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக வழக்கு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்கு நீதிபதி இளஞ்செழியனுக்கு அழைப்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றம் இந்த அழைப்பு கட்டளையை பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை(24.04.2024) புதன்கிழமை நீதிமன்றில் சாட்சியம் அளிக்க முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 22.07.2017 அன்று நல்லூர் சந்தியில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

  • தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்!

    தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள்!

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையின் மட்டக்களப்பு (Batticaloa) பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன், கஜேந்திரன் மற்றும் அவரது எட்டு வயது மகன் உள்ளிட்ட 3 நபர்கள் தனுஷ்கோடிக்கு அடுத்த ஐந்தாம் மணல் தீடையில் இன்று (22) காலை தஞ்சம் அடைந்துள்ளதாக இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்

  • சமூக வலைத்தளங்கள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

    சமூக வலைத்தளங்கள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

    காலியில் (Galle) சமூக வலைத்தளங்கள் ஊடாக கடன் பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (22) மாத்தறை (Matara) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். இமதுவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

  • திறக்கப்படவுள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்!

    திறக்கப்படவுள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்!

    யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(22.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

    இன்று இடம்பெற்ற கோர விபத்து: ஸ்தலத்தில் ஏழு பேர் பலி!

    தியதலாவ பகுதியில் பாரிய விபத்தொன்றில் ஏழு பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (21) சற்று முன்னர் இடம்பெறுள்ளது.மேலும் இந்த விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இடம்பெற்ற காரோட்ட பந்தய போட்டியின் (Fox Hill Super Cross – 2024 ) போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

  • அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

    அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

    இலங்கையின் பல பகுதிகளில் நாளை (22) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு வெப்பம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • மூடப்படும் மதுபானசாலைகள்!

    மூடப்படும் மதுபானசாலைகள்!

    பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் மே 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.