Tag: #srilankannews
-
வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
மினுவாங்கொடை நீதிமன்றத்தினால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தகர் ஒருவர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்த போது குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் அதிகாலை 01.08க்கு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் புறப்படவிருந்த தாய் எயார்வேஸ் விமானமான TG-308 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது வர்த்தகர் விமான…
-
வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது!
வவுனியாவில்(Vavuniya) குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது வீதியில் முகத்தை துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த…
-
மக்களின் வங்கி கணக்குகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
நாட்டில் வங்கிக் கணக்குகளில் சுமார் 60 வீதமான வங்கிக் கணக்குகளின் மீதி 5000 ரூபாவிற்கும் குறைவானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, வரிச் செலுத்துவதனை தவிர்க்கும் நபர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு தடை விதித்த இலங்கை அரசு!
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் செல்லும் ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல் எல்லையை பயன்படுத்தாமல், எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் இதர வசதிகளை பெற அமெரிக்க ஆய்வு கப்பல் அனுமதி கோரியதால், சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை செய்து…
-
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி!
இலங்கையின் வடக்கு – கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.
-
வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!
தனியார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!
யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய…
-
யாழ். வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (25.04.2024) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி…
-
மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் தனியாருக்கு!
மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, இந்த விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவட் லிமிடட் (Shaurya Aeronautics Pvt. Ltd) நிறுவனத்திடமும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜன்ஸ் மெனேஜ்மன்ட் (Airports of Regions Management Company) நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்தளை விமான நிலையத்தை வாங்குவதற்காக, விருப்பம் தெரிவிப்பு…
-
ருமேனியாவுக்கு ஆட்கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!
போலி ஆவணங்கள் மற்றும் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி ருமேனியாவில் இளைஞர்கள் குழுவொன்றை வேலைக்கு அனுப்ப முயற்சித்த நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக, ருமேனியாவிற்கு வேலைக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் ஆவணங்களைச் சரிபார்த்த போது ஏமாற்றப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். இதன் பின்னர், பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப்…