Tag: #breakingnews

  • நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா தேர்தல் முடிவுகள்!
  • தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகளே மண்ணுக்காக வாய் திறங்கள் : முன்வைக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

    தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது நாடாளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இன்று(08.05.2024) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது. கொக்கதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு…

  • வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!

    வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!

    வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர்  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

  • யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார். கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று…

  • உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!

    உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!

    2019 ஆம் ஆண்டு நாட்டை பதற்றத்துக்கு இட்டுச்சென்ற உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் (03.05.2024) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சுமார் ஐந்து மணிநேரம் அவர் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

  • வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!

    வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!

    வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் வாகன தேவைகளை நான்கு வகைகளாக பிரித்திருக்கின்றோம். முதலாவதாக பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பேருந்து, லொறி போன்றவையைக் குறிக்கும். இரண்டாவது பொது தேவைக்காக மக்களினால் பயன்பபடுத்தப்படுகின்ற வாகனங்கள். உதாரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.

  • கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

    கனேடிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

    கனேடிய பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 வீதமாக அதிகரித்திருந்தது. மேலும், கடந்த பெப்ரவரி மாதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மொத்தமாக 20 துறைகளில் 12 துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக…

  • கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

    கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

    போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 வயதான இளைஞனை அழைத்து செல்லும் நோக்கில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.அதற்கமைய இரண்டு பெண்கள் உட்பட குறித்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

  • யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள்!

    யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள்!

    யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் (29.04.2024) இன்றாகும். ஏ – 9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டில் இளைஞர்கள் வெள்ளை வானில் ஒட்டுக்குழுக்களாலும், அரச படைகளாலும் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதுமான 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே, அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்த ஸ்ரான்லி வீதியும், இராசாவின் தோட்டப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் வைத்து ரஜீவர்மன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுவிட்டு…