Category: முக்கிய செய்தி

  • விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குங்கள்!

    விழிப்புலனற்ற வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விசேட செயற்திட்டம் ஊடாக விரைவாக அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என விழிப்புலனற்ற பட்டதாரியான விஜயகுமார் விஜயலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்   யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நான் எனது பட்டப்படிப்பை முடித்து சுமார் நான்கு ஆண்டு கால பகுதிக்கு மேலாக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. படிக்கும் காலத்தில் நாம் மற்றுமொருவரின் உதவியுடன் பல தடைகளை தாண்டிய கற்று, பட்டதாரி…

  • யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழில். தமிழ் பொலிசாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓத வைத்த பொலிஸ் உயர்மட்டம்!

    யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில்  நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை…

  • யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    யாழ். மருத்துவ பீடத்திற்கான புதிய கட்டட தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.   இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும், ஒரு சத்திர சிகிச்சை கூடமும், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம், மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.…

  • யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

    யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.   காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறையை சேர்ந்த கணவன் – மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் கார் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் கணவன் – மனைவி…

  • யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம்!

    யாழில்.வாள் வெட்டில் இளைஞன் படுகாயம்!

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது.   தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , வாள் வெட்டு சம்பவத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தொடர்பு பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

  • கனடாவில் கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள்!

    கனடாவில் கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள்!

    கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள் திரட்சியோடும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும், மாபெரும் எழுச்சி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கனடாவிலும் அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் மே 18, 2024 சனிக்கிழமை மாலை பல்லின மக்களையும் ஈர்க்கும் வண்ணம் வரலாற்றில் பதிவாகியுள்ளது! இவ்வாண்டு தாயக மக்களின் அடக்குமுறைகளைத் தகர்த்துடைத்த பேரெழுச்சியும், உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சியும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் எம் தமிழினத்தின் ஓயாத ஒன்றுப்பட்ட நீதி வேண்டிப் போராடும் வலிமையான செய்தியை உலகிற்கு ஓங்கி…

  • அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்

    அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வோம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி ஸ்கார்புரோவில் பரிமாறப்படும் இடங்களின் விவரங்கள்

    நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி முள்ளிவாய்கால் கஞ்சி ஸ்காபுரோவில் நியூஸ் ஸ்பைசி லாண்ட், இரா சுப்ப மாக்கற், நியூ ஓசன்,ரூச் பேக்கறி மற்றும்பிறம்ரணில் தினுசா கேற்றறிங், மாயா கேற்றறிங், மற்றும் மாக்கம் சவுத்தேசியன் ஆகிய இடங்களில் மே18 வரை இடம் பெறுகின்றன. அனைவரும் கலந்து நினைவு வணக்கம் மற்றும் கஞ்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறு வேண்டுகின்றோம்.

  • முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!

    முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை!

    திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.   முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உள்ளிட்ட மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமையை அடுத்து மன்றின் உத்தரவுக்கமைய 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.…

  • விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு நேர்மையற்றது: இயக்குனர் கௌதமன் குற்றச்சாட்டு

    விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளதாக இயக்குநர் கௌதமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீடிப்பு நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப்புலிகள் வன்முறை இயக்கம் அல்ல என ஜரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டி, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்திய அரசாங்கம் மேலும் 5 வருடங்களுக்கு தடையை நீடித்துள்ளதன் மூலம்…

  • யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

    யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது.   கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம்…