Category: முக்கிய செய்தி

  • அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

    இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது இலங்கை செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் திகதி…

  • பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்.பி கைது!

    பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று மாலை 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி  இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…

  • 100வது ரொக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று தனது 100வது ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 (GSLV-F15) ரொக்கெட்டின் மூலம் என்.வி.எஸ்-02 (NVS-02) என்ற உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் புவியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இன்று 29 ம் திகதி காலை 6.23 மணிக்கு ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கவும், பேரிடர்களை துல்லியமாக கணிக்கவும்…

  • ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல்! அவசரமாக நடாத்த முதல்வர் திட்டம்!

    ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல்! அவசரமாக நடாத்த முதல்வர் திட்டம்!

    கனடாவின் பிரதான மாகாணங்களில் ஒன்றான ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் தேர்தல் தொடர்பில் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு எனினும் மகாண அரசாங்கம்…

  • யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கும் தீ வைப்பு!

    யாழில். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கும் தீ வைப்பு!

    யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது.   அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, தாக்குதலை…

  • மந்திகை வைத்தியசாலையில் வைத்தியர் உயிர்மாயப்பு!

    மந்திகை வைத்தியசாலையில் வைத்தியர் உயிர்மாயப்பு!

    யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை  வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  • புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ள வேண்டும்!

    புலம்பெயர் உறவுகள் சிறந்த பொறிமுறையின் கீழ் நிதியுதவிகளை மேற்கொள்ள வேண்டும்!

    ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc – Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.   வடக்கு மாகாண ஆளுநர்  செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வட மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர் (காணி ), மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்…

  • வவுனியாவில் பொலிஸ் வாகனம் விபத்து!

    வவுனியாவில் பொலிஸ் வாகனம் விபத்து!

    வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.   நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது. வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கொட்டகையில்…

  • தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல!

    தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்துவதும் ஒன்றல்ல!

    ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதும் . பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்க கோருவதும் ஒன்றல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியானது கொள்கை ரீதியாகப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நிலையை ஏற்கனவே எடுத்திருந்தாலும் இந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ போன்ற கட்சிகள்இந்த விடயத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்…

  • அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அட்டகாசம்!

    அச்சுவேலியில் வீடொன்றுக்கு தீ வைப்பு – 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அட்டகாசம்!

    யாழ்ப்பாணத்தில் 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று பண்ணை வீடொன்றின் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலை மேற்கொண்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.   அச்சுவேலி , கைத்தொழில் பேட்டையில் உள்ள பண்ணை ஒன்றினுள் காணப்பட்ட வீடொன்றின் மீதே குறித்த வன்முறை கும்பல் தாக்குலை மேற்கொண்டுள்ளது. குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மீது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை…