Category: பிரதான செய்தி

  • நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

  • கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

    கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

    கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், நாங்கள் மற்ற நாடுகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்கிறோம். ஆனால் கனடா பல ஆண்டுகளாக சமாளிக்கவே மிகவும் கடினமாக உள்ளது என்றார். மேலும், எங்கள் கார்களைத் தயாரிக்க கனேடியர்களின் உதவி எங்களுக்குத் தேவையில்லை, அவர்களே அவற்றை அதிகமாக உருவாக்குகிறார்கள். எங்களுக்குச் சொந்தமாக காடுகள் இருப்பதால்…

  • உலகமெங்கும் முழங்கும் முரசு!

    உலகமெங்கும் முழங்கும் முரசு!

    முரசு வருகிறான்! இனி உரக்க சொல்லும் – இதுவே வெல்லும்

  • கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் உச்சம் தொட்ட வீட்டு வாடகை: அவதியுறும் புலம்பெயர் தமிழர்கள்

    கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது. Rentals.ca மற்றும் Urbanation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவர் மற்றும் டொராண்டோவில் 2023 ஆண்டு மே மாதம் முதல் வீட்டு வாடகைத்…

  • விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு: வைக்கோ கடும் கண்டனம்

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது அநீதியான செயல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை.…

  • முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது !

    முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது !

    முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் இன்று(12) முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார தடைகள் என மக்களுக்கு உணவு மருந்து என எதையுமே கிடைக்கவிடாது தடுத்து உச்சக்…

  • இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 27 பேர் உயிரிழப்பு!

    இந்தாண்டில் மாத்திரம் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 27 பேர் உயிரிழப்பு!

    2024ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.   இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், 12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டுகளில் பெரும்பாலானவை பாதாள…

  • மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (LIVE)

    மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு (LIVE)

    மாமனிதர் ஈழவேந்தன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் கீழ் உள்ள இணைப்புனூடக நேரலையில் பார்வையிடலாம்.

  • ஈழவேந்தன் தமிழ் இனத்தின் சரித்திரம்

    ஈழவேந்தன் தமிழ் இனத்தின் சரித்திரம்

    நீண்ட விடுதலைப் பயணித்தில் சளைக்காமல் , ஓய்வின்றித் தமிழீழம் என்ற ஒரே குறிக்கோளுக்காக உழைக்கும் உன்னத விடுதலைப் போராளி , “புலிக் கிழவன்” ஈழவேந்தன் இனப்பற்றாளன், மொழிப்பற்றாளன், இன்றுவரை தமிழீழ தீவிர செயற்பாட்டாளன் தமிழீழ தேசியத்தலைவர் மீது இன்றுவரை தீவிரபற்றளன். தமிழீழத் தேசியத் தலைவரின் இதயத்தில இடம் பிடித்த மாமனிதர்களில் ஈழவேந்தன் குறிப்பிடத்தக்கவர். தலைவரின் பணிப்பில் இந்தியா,கனடா, தென்னாபிரிக்காவுக்கும்,மொறிசியஸ் நாட்டுக்கும் சென்று அமைச்சர்கள் , இராஜ தந்திரிகளைச் சந்தித்ததுடன், மொறீசியஸ சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இராஐதந்திர…

  • சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்!

    சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்!

    2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைப் பரீட்சார்த்திகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அனுமதி அட்டைகளை தபாலினூடாக பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.