Category: உலக செய்திகள்

  • ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தினால் 12 பேர் காயம்

    ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தினால் 12 பேர் காயம்

    ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மேலும் பலர் இடம்பெயர நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கட்டடத்தின் ஆறாம் மாடியில் தீ விபத்து பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  • அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

    அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

    அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார். அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டுவதே DODGE துறையின் கடமையாகும். இந்த நிலையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார். உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம்…

  • தெற்கு சைபீரியாவில்  உள்ள அல்தாய் குடியரசில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தெற்கு சைபீரியாவில் உள்ள அல்தாய் குடியரசில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் உயர் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் நிலநடுக்க மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளதால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கத்தால் ஒரு சில பகுதிகளில் சிறியளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் இணையதளத்தில் வதந்திகள் பரவி வருவதைப்…

  • ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,400 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

    ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து 2,400 இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

    முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், கிட்டத்தட்ட 2,400 இரகசிய ஆவணங்கள் கையிருப்பில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கென்னடியின் படுகொலை தொடர்பான பல முக்கிய தகவல்கள் ஆவணங்களில் உள்ளதாக பணியகம் கூறுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவின்படி இந்த கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, கென்னடி படுகொலை தொடர்பான அரசு கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டது.…

  • இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    இஸ்ரேல் -ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக…

  • விபரீதமாக முடிந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஈரானில் பிரித்தானிய தம்பதி கைது

    விபரீதமாக முடிந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஈரானில் பிரித்தானிய தம்பதி கைது

    ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிரித்தானிய தம்பதியினரின் பெயர்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். கிரேக்(Craig) மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன்(Lindsay Foreman) என்ற பிரிட்டிஷ் தம்பதியினர் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த “கவலைக்கிடமான சூழ்நிலை” குறித்து ஃபோர்மேன் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர் அவர்களின் விடுதலைக்காக பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். லிண்ட்சே ஃபோர்மேனின் சமூக ஊடக பதிவுகளின் படி, தம்பதியினர் நேர்மறை உளவியல் முயற்சியின் ஒரு பகுதியாக பிரித்தானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மோட்டார் சைக்கிள்…

  • மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் நிறுவனம் மீது மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை

    மெக்சிகோவை பெயர் மாற்றிய கூகுள் நிறுவனம் மீது மெக்சிகோ ஜனாதிபதி எச்சரிக்கை

    மெக்சிகோவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார். மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர்…

  • பிரபல நட்சத்திர லண்டன் ஹோட்டலில் தீ பலர் வெளியேற்றம்.

    பிரபல நட்சத்திர லண்டன் ஹோட்டலில் தீ பலர் வெளியேற்றம்.

    லண்டனில் உள்ள பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. நேற்று மதியம் சில்டர்ன் ஃப்பயிர் ஹாவுஸ் (Chiltern Firehouse) ஹோட்டலில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கூறபடுகின்றது. 20 தீயணைப்பு வாகனங்களும் சுமார் 125 வீரர்களும் சம்பவ இடத்துக்கு அனுப்பட்டதாக லண்டன் தீயணைப்புத் துறை தெரிவித்தது. ஹோட்டலில் முதல்மாடியில் மூண்டத் தீ நாலாவது மாடி வரை பரவியதாகவும், எனினும் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள்…

  • குவியும் பாராட்டு 4 ஆயிரம் அடி உயரத்தில் நபரின் செயல்

    குவியும் பாராட்டு 4 ஆயிரம் அடி உயரத்தில் நபரின் செயல்

    ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். ‘ஸ்கை- டைவிங்’ சாகசங்களில் ஈடுபடும் இவர் 4 ஆயிரம் அடி உயரத்தில் ‘ஸ்கை- டைவிங்’ சாகசம் செய்து காற்றில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாதியிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி சென்றார். இதை அவரது பயிற்சியாளரான ஷெல்டன் மெக்பார்லேன் என்பவர் கவனித்தார். உடனடியாக அவர் பாராசூட் ரிப் கார்டை பிடித்து இழுத்து கிறிஸ்டோபர் ஜோன்சை மீண்டும் சுய நினைவுக்கு…

  • உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா டிரம்ப் தெரிவிப்பு

    உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா டிரம்ப் தெரிவிப்பு

    உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விட்யங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை…