Category: உலக செய்திகள்

  • டிரம்ப் மீண்டும் 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உத்தரவு

    டிரம்ப் மீண்டும் 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உத்தரவு

    அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யூஎஸ்ஏஐடி) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500-க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சில ஊழியர்களை தவிர்த்து அனைவரையும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகி…

  • ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு அபராதம்

    ஆஸ்திரேலியா டெலிகிராமிற்கு அபராதம்

    அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில் தாமதம் செய்ததற்காக டெலிகிராமுக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதித்துள்ளது. நாட்டின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை அளவிடுவதற்காக மெட்டா, வான்ஸ்அப், கூகுள், ரெடிட், எக்ஸ் மற்றும் டெலிகிராமிருந்து வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை eSafety கடந்த மார்ச் மாதம் கோரியிருந்தது. ரெடிட் மற்றும் டெலிகிராம் ஆகியவை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் (CSAM),…

  • அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும்

    அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும்

    ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது. ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) கூறுகையில் அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் (Friedrich Merz) , ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என…

  • அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

    அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

    அமெரிக்காவில் இருந்து பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள், நேற்று (பிப்ரவரி 23) இரவு டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவால் பனாமாவிற்கு நாடுகடத்தப்பட்ட 299 சட்டவிரோதக் குடியேறிகளில் இந்த 12 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டிருந்தனர். அமெரிக்காவில் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை அவரவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும்…

  • போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ஹமாஸ்

    போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ஹமாஸ்

    இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியிருந்தது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இஸ்ரேல் தெரிவித்த நிலையில் , நேற்று முன் தினம் பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நடவடிக்கையின்போதும் காசாவில் மேடை அமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டு பணய கைதிகள்…

  • புதிய வௌவால் கொரோனா வைரஸ் சீனாவில்

    புதிய வௌவால் கொரோனா வைரஸ் சீனாவில்

    சீனாவில் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் புதிய வைரஸ் காரணமாக மீண்டுமொரு வைரஸ் தொற்று நோய் பரவல் ஏற்படும் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. HKU5-CoV-2 என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸான SARS-CoV-2 ஐப் போன்றது என தெரிவிக்கப்படுகிறது. HKU5-CoV-2 மனிதனிலிருந்து மனிதனுக்கு அல்லது குறுக்கு-இன பரவலுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வில், HKU5-CoV-2 மனித செல்கள் மற்றும் நுரையீரல் மற்றும் குடல் திசுக்களைப் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டதாக…

  • அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரோம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை (23) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 199 பயணிகள், 15 ஊழியர்கள் என மொத்தம் 214 பேர் பயணித்தனர். துர்க்மேனிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் இத்தாலிக்கு திருப்பி விடப்பட்டது. இத்தாலி விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்புடன் பயணிகள் விமானம் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டு விமானத்தில்…

  • அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் பறக்க தொடங்கிய கார்

    அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவில் பறக்க தொடங்கிய கார்

    அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவில் ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன் புதுமையான பறக்கும் காரின் புரட்சிகரமான நகர்ப்புற சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த அற்புதமான நிகழ்வின் வீடியோ காட்சிகள், சாலையில் ஓட்டுவதிலிருந்து வானத்தில் உயரும் வரை தடையின்றி மாறும் ஒரு வாகனத்தைக் காட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அலெஃப் ஏரோநாட்டிக்ஸ், கலிபோர்னியாவின் சான் மேடியோவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.…

  • பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் 3 காவல்துறையினர் காயம் ஒருவர் பலி

    பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலில் 3 காவல்துறையினர் காயம் ஒருவர் பலி

    பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளில் இருவர் படுகாயமடைந்தனர். ஒருவருக்கு கழுத்திலும் மற்றவருக்கு மார்பிலும் கத்திக்குத்து நடத்தப்பட்டபோது 69 வயது போர்த்துக்கீசியர் இந்த சம்பவத்தில் தலையிட முற்பட்ட போது அவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். சந்தேக நபரான 37 வயது அல்ஜீரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டார். காங்கோ ஜனநாயகக் குடியரசை…

  • யேர்மனி நடைபெற்று முடிந்த தேர்தலில்  முன்னிலையில் CDU/CSU

    யேர்மனி நடைபெற்று முடிந்த தேர்தலில் முன்னிலையில் CDU/CSU

    யேர்மனியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் CDU/CSU 29% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றன என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகால கணிப்புகள் யேர்மனியின் பழமைவாத கூட்டணி சுமார் 29% வாக்குகளைப் பெற்று, தீவிர வலதுசாரி AfD ஐ விட 19.5% வாக்குகளுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறுகின்றன. யேர்மனியில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு (0700 UTC) தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சமீபத்திய கணிப்புகள் CDU/CSU 29% ஆகவும், வலதுசாரி ஜனரஞ்சகவாத AfD சுமார் 19.5% ஆகவும்,…