Category: இலங்கை செய்திகள்

  • விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும்  இடையே விசேட சந்திப்பு

    விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே விசேட சந்திப்பு

    நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) சந்திப்பானது இடம் பெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், வலுவான விமானப் படையாக இலங்கை விமானப்படையை வலுப்படுத்தல், இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னெடுப்புகளுக்காக விமானப்படையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இம்முறை வரவு செலவு திட்டத்தில் இலங்கை…

  • இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

    இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதம்

    அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 299 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 381 ரூபா 38 சதமாகவும் கொள்வனவு விலை 367 ரூபா 46…

  • நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற  சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜைகள்

    நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றன. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை ஆறு மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை ஆறு மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிஸார்…

  • வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    வீட்டு வாடகை தொடர்பாக தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் உள்ள கம்பிலிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, உயிரிழந்தவர் கணவனையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த நபரின் கையில் இருந்த கூர்மையான…

  • கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது

    கொழும்பில் புதிய கிளையை அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம் திறந்துள்ளது

    இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்தில் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1880 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள்…

  • போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்

    போராட்டமொன்றை முன்னெடுக்க தயாராகும் தாதியர்கள்

    வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தை  முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். நாளை வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. வரவு – செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு கடுமையான அநீதி இழைத்துள்ளதால் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கூறும் தாதியர் சங்கங்கள், தமது பிரச்சினைக்கு அரசாங்கம்…

  • நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்

    நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்

    சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்தார். அதன்படி, அவர் குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

  • இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம்

    இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம்

    இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம்…

  • இலங்கை மற்றும் மாலைதீவு இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

    இலங்கை மற்றும் மாலைதீவு இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

    மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.…

  • உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது

    உளவுத்துறை ஜனாதிபதியை எச்சரிக்கிறது

    பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா…