Category: இலங்கை செய்திகள்
-
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில்,…
-
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகமது முனீர் குறிப்பிட்டார்.
-
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது. மூன்று சதவீத சலுகையை இரத்து செய்யும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய…
-
சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட இலங்கை நிதி வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதி நான்காவது தவணையாக இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம், சர்வதேச நாணய நிதியம் இன்றுவரை இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி உதவி 1.34 பில்லியனை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சமூக…
-
இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்கபட வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர…
-
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்றுஇடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்…
-
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம்
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். IATO வின் தலைவர் ராஜீவ் மெஹ்ராவின் கூற்றுப்படி, இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகான தீவாக இருப்பதாலும் கலாச்சார உறவுகள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதாலும் இந்திய பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில்…
-
52 வீதத்தால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு பகுப்பாய்வு மையத்தின் புதிய அறிக்கை
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இன்னுமும் 50 வீதமான வீடுகளில் நவீன முறைக்கேற்ப மின்சார தேவைகள் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அஸ்வெசும நன்மைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் 2,600 குடும்பங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்…
-
செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள…