Author: Kavaskar
-
இதுவரையில் அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் இடம்பெற்றுள்ளன: நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை அதிகபட்சமாக 260 ரூபாய்க்கு விற்கபட வேண்டும். அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் அல்லது அதிக பணம் கோரிய வர்த்தகர்களும் இருந்தால், அதிகாரசபையின் அவசர…
-
கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று தேர்தல்
ஒண்டாரியோ மாகாண தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாகாணம் முழுவதும் வாகளர்கள் தங்களது அடுத்த மாகாண அரசை தேர்ந்தெடுக்கத் தயாராக உள்ளனர். ஒண்டாரியோவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூன் 2026-ல் நடத்தப்பட வேண்டும். ஆனால், டக் ஃபோர்டு (Doug Ford) கடந்த ஜனவரி மாதம் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (tariff) விதிக்கலாம் என்ற அச்சுறுத்தல், இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டால், ஒண்டாரியோ அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பில்லியன்…
-
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030” அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்றுஇடம்பெற்றது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் மற்றும் டிஜிட்டல் மூலோபாயங்கள், அவற்றின் வினைத்திறனான மற்றும் சூழல்நேய பயன்பாடு மற்றும் இந்த வலுசக்தி முறைகளின் ஊடாக நாட்டின் பொருளாதார ஆற்றலை எவ்வாறு உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்…
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தலைவராக சுப்மன் கில்
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார். பின்னர்…
-
போப்பின் மரணம் மற்றும் வாட்டிகனின் வீழ்ச்சியை கணித்த ஜோதிடர்
16 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ் போப்பின் மரணத்தையும், வாட்டிகனின் வீழ்ச்சியை பற்றியும் கணித்த தகவல் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாட்டிகனின் அறிவிப்பு, போப்பின் மறைவு தொடர்பில் நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாஸ்ட்ராடாமஸ் இன் புகழ்பெற்ற புத்தகமான “லெஸ் ப்ராபெட்டீஸ்”-ல், போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் எழுச்சிகள் மற்றும் படுகொலைகள் பற்றி நாஸ்ட்ராடாமஸ் உலகிற்கு ஏராளமான கணிப்புகளை வழங்கியதாக…
-
இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்ட நபர் கனடாவில் கைது
டொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளி ஒற்றையனாக செயல்பட்டு, கத்தியை காட்டி பணம்…
-
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம்
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். IATO வின் தலைவர் ராஜீவ் மெஹ்ராவின் கூற்றுப்படி, இலங்கை இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகான தீவாக இருப்பதாலும் கலாச்சார உறவுகள் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டிருப்பதாலும் இந்திய பயணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில்…
-
52 வீதத்தால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பு பகுப்பாய்வு மையத்தின் புதிய அறிக்கை
கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இன்னுமும் 50 வீதமான வீடுகளில் நவீன முறைக்கேற்ப மின்சார தேவைகள் பூரணப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அஸ்வெசும நன்மைத் திட்டத்தை பெற்றுக் கொள்ளும் 2,600 குடும்பங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்…
-
செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். தேவையான நடவடிக்கைகளுக்காக மற்றொரு பொலிஸ் குழு துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிறப்புக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுனில் வட்டகல மேலும் கூறுகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெளிநாட்டு பாதாள…
-
இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதியதில் விபத்து
இங்கிலாந்தில் விமானம் பனிமலையில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றில் விமானி உள்பட 3 பேருடன் சென்று கொண்டிருந்தது. வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குவிரைந்த மீட்பு படையினர் அப்போது விமானத்தில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டனர். குறித்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…