Author: Kavaskar
-
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் முயற்சி
மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார். மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆக, கனடாவின் தலைவரும் மன்னர் சார்லஸ்தான். இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே…
-
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டம்.
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செயின்ட் லூயிஸ், நியூயாா்க், சாா்லட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதோடு…
-
வயதான தாயை கொலை செய்த மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 81 வயதான தாயை கொலை செய்த 57 வயது மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் 2023 ஆண்டு ஜுன் 12 ஆம் திகதியே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன், தாயின் கழுத்தை நெறித்துள்ளார். இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவான மக்கள் 2023, ஜுன் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கிலேயே…
-
தெற்கு கரோலினாவின் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்ட்டில் கடற்கரையில் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 1,200 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து தென் கரோலினா ஆளுநர் ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
-
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்
காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் நாளில், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் உயிருடன் மற்றும் இறந்தவர்களில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பணயக்கைதிகளும் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்…
-
டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடா, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். இப்புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், மார்ச் 4ஆம் திகதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் சற்றுமுன் தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள் மற்றும்…
-
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கூறிய விடயம் கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிக்க இருப்பதாக் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவர்எதிர்பார்த்ததுபோலவே பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் நிலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார். ஆக, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக…
-
1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றினர். தொடர்ந்து கொக்கோவில் பகுதியில் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். இந்நிலையில்,…
-
இன்று முதல் புனித ரமலான் நோன்பு காலம் ஆரம்பம்
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02) ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முகமது முனீர் குறிப்பிட்டார்.