Author: Kavaskar

  • பூமியில் உள்ளோரின் முகங்களை விண்வெளியில் இருந்து அடையாளம் காணும் கமரா

    பூமியில் உள்ளோரின் முகங்களை விண்வெளியில் இருந்து அடையாளம் காணும் கமரா

    விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை மறுவரையறை செய்யக்கூடிய சக்திவாய்ந்த லேசர் அமைப்புடன் சீன விஞ்ஞானிகள் ஆப்டிகல் இமேஜிங் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேம்பட்ட இந்த இமேஜிங் சாதனம் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இருந்து மில்லிமீட்டர் அளவிலான விவரங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இது உளவுத்துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும்.

  • செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

    செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

    கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு நீதிமன்றத்திற்கு துப்பாக்கியைக் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபரான குறித்த பெண் நாட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சிறப்ப தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார், மேலும் சில தகவல்கள் அவள் வெளிநாட்டிற்கு தப்பிச்…

  • இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் விடுதலையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவிப்பு

    இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் விடுதலையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவிப்பு

    இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை…

  • எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி தெரிவிப்பு

    எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி தெரிவிப்பு

    எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இளைஞர் அமைப்பின் அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை தீக்கிரையாக்க இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதில்லை, புதிய நாட்டிற்காக இளைஞர்கள் வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக, நாம் ஒரு புதிய பயணத்தைத்…

  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு : அரசாங்கத்தின் தீர்மானம்

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு : அரசாங்கத்தின் தீர்மானம்

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற…

  • வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது

    வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது

    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் வயிற்று வலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மாணவியை சோதனை…

  • துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பு

    துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிப்பு

    நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த போது பேசிய திசாநாயக்க, சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாகும் என்றும், அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஸ்திரமின்மையை உருவாக்க முயற்சித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

  • அமெரிக்காவில் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

    அமெரிக்காவில் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்

    அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு கார்களை திருப்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்த நிலையில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவுவதற்கு காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  • சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து

    இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 30க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்குண்டு இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த நாகர்கர்னூல் மாவட்டத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் வழமைபோல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தின் ஒரு பகுதி கூரை இடிந்து…