Author: Kavaskar
-
கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து…
-
பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : போலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிபி மெதவல அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விசேட பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.எதிரிமான்ன, காலி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.ஜி.பி.பி…
-
டொரொண்டோ ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை
டொரொண்டோ யோர்க்வில் (Yorkville) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ வேகமாக அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது. தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இன்னும்…
-
கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவின் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 17.75 டொலர்களாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தற்போது உள்ள 17.40 டொலர்களாக செலுத்தும் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.4% அதிகரிப்பு ஆகும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பகுதி நேரம், தற்காலிக வேலைகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது நன்மை…
-
மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது
பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் Montreal பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்தமை (Grandparents Scam) தொடர்பாக கைது செய்துள்ளனர். ந்த மோசடியில் 21 மில்லியன் டொலருக்கும் மேல் களவாடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மொன்றியல் (Montreal) அருகிலுள்ள பொயின்டெ கிளெரி என்ட் வாடிவில் டொரியா (Pointe-Claire & Vaudreuil-Dorion) பகுதிகளில் உள்ள கால்செண்டர்களில் இருந்து…
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன், தான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவையான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள டிரம்ப், நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்றும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்,…
-
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை 535 ஆகும். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 63 கடற்படை வீரர்களும் 81 விமானப்படை வீரர்களும் அடங்குவர். கடந்த மாதம் 22…
-
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை அவர் தலைமறைவு
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தெரிவிக்குமாறு…
-
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியாகும் என அரசாங்கம் அறிவிப்பு
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ”அரச ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்னிலையில் உள்ளன. அவற்றை தொழில்நுட்பமயப்படுத்த வேண்டும். இதற்கான ஜப்பான் அரசு நன்கொடையை வழங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களுக்கு நிகராக அரச ஊடகங்களை கட்டியெழுப்ப வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு 100 புலமை…
-
மாணவர்கள் சட்டத்துக்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது தடை விதிக்கும் டிரம்ப்
அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அதிபர் டிரம்ப் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் போராடினால், அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து, டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள்…