Author: ped36
-
இளவரசி கேட் மிடில்டனுக்கு கீமோதெரபி சிகிச்சை
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. வேல்ஸ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுக்கு வயது 42. இவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேட் மிடில்டனை காணவில்லை என வதந்திகள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் கென்சிங்டன் அரண்மனை தரப்பில், இலண்டன் மருத்துவமனையில் கேட் மிடில்டன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு…
-
இசை கச்சேரியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 60 பேர் பலி
ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டிருக்கின்றனர். நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று…
-
இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச டீப்பேக் :இழப்பீடு கேட்டு வழக்கு
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர்…
-
வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை!
இந்தாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தற்போது வரை, புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ள இந்நிறுவனம், வெப்பநிலை அதிகரிப்பால், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டத்தின் அளவு உயரும் என்றும் எச்சரித்துள்ளது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில்…
-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி…
-
கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை!
முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வு பணிக்கான நிதியானது கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் (2024.02.22) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. …
-
”தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே” கவனயீர்ப்பு போராட்டம்
கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச்சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றது . இப்போராட்டத்தை சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வழிபாடு எமது அடிப்படை உரிமை ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம்,ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டைத் தடுக்கும்…
-
மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த ஆலய பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு
மட்டக்களப்பு சின்ன ஊறனி மெதடிஸ்த ஆலய பாபர அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மார்ச் மாத திட்ட நிகழ்வாக சிரமதான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. ‘சுற்றாடலை சுத்தமாக பேணி பிளாஸ்டிக் எனும் பேர் அரக்கனை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் கலாநிதி கே.ஜெ.அருள்ராஜ் தலைமையில், அருட் பணி ஜெகதாஸின் அடிகளாரின் வழிகாட்டலில் சிரமதானம் நடைபெற்றது.
-
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு- பொலிஸ் மா அதிபர் அதிரடி பணிப்புரை
ஈஸ்டர் ஞாயிறு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறும் தேவாலயத்திற்கு வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் வகையில் தேவாலயங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களின் பாதிரியார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை…
-
கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு!
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தொழில் மற்றும் கல்வி நோக்கில் கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு துரித கதியில் நிரந்தர வதிவுரிமை கோரிக்கை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.