Author: Menaka Mookandi
-
வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து கனடாவில் எச்சரிக்கை
கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் பதிவான முதல் வௌவால் ரேபிஸ் தொற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. வௌவால்கள் மற்றும் ஏனைய விலங்குகளின் அருகாமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சில விலங்குகளின் ஊடாக இந்த ரேபீஸ் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரேபீஸ் தொற்றினால்…
-
அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு இனி அதிக வரி விதிப்பு
சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 4ஆம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி…
-
அமைச்சரவை வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அனுமதி
வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும்…
-
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை சமர்ப்பிப்பு
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (03) தொடர்புடைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தைத் தவிர, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை கூட்டாக இணைந்து தொடர்புடைய வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடைபெற்ற அமைதியான தேர்தல்களையும் தற்போதைய…
-
முஸ்லிம் தீவிரவாதக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ
கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்தக் குழு தொடர்பில் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.
-
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், முந்தைய நெருக்கடியின்…
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை அடுத்து ஸெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து காணொலியொன்றை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்த காணொலியில் “ஐரோப்பாவிடமிருந்து தெளிவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். அமைதி உண்மையானதாக இருக்க, உக்ரைனுக்கு உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை எனும் முக்கிய பிரச்சினையில் அனைவரும்…
-
ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நிர்ணயித்த டிரம்ப்
அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான ஆங்கிலம் பேசப்பட்ட போதிலும் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி…
-
தண்ணீர் ஒவ்வாமையால் அவதிப்படும் பிரித்தானிய பெண்
தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறாராம் அதுமாத்திரமல்லாமல் சாதரணமாக தண்ணீரில் கை கழுவினாலும் வலி மற்றும் எரிச்சல் அதிகரிக்குமாம். குறித்தப் பெண்ணுக்கு இந்த ஒவ்வாமையானது 15 வயதில் இருந்து இருப்பதாகவும் இதற்கான சரியான மருந்து கண்டுப்பிடிக்காத காரணத்தால் வைத்தியர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என கூறப்பட்டுள்ளது. அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் உட்பட்டோரை சந்திக்கவுள்ளார். மேலும், சம்பூருக்கு மின் திட்டமொன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் வருகையையொட்டி…