Author: Menaka Mookandi

  • வாகனங்கள் மீது வரி விதிப்பு ட்ரம்ப் தெரிவிப்பு

    வாகனங்கள் மீது வரி விதிப்பு ட்ரம்ப் தெரிவிப்பு

    வாகனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் 2-ம் திகதி வரி விதிப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக வாகனங்களுக்காக இந்த வரி அறவீடு செய்யப்பட உள்ளது. அமெரிக்காவிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது இந்த வரி விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறான வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவிற்கு அதிகளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில்…

  • நாய் கடிக்கு இலக்ககி கனடாவில் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

    நாய் கடிக்கு இலக்ககி கனடாவில் சிறுவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

    கனடாவில் நாய் கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் எட்மாண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 14 வயதான சிறுவனே இவ்வாறு நாய் கடிக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். என்ட்விஸ்டல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த சிறுவன் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நாயை வளர்த்த நபர் போலீசாரிடம் சரணடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.  

  • முந்தைய அரசாங்க பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சி:எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை.

    முந்தைய அரசாங்க பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சி:எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை.

    முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய வரவு செலவுத்திட்ட உரை இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்தத் திட்டம் தவறு என்று தான் கூறவில்லை என்றாலும், அரசாங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு குறித்து இது கடுமையான கவலைகளை எழுப்புகிறது என்று சில்வா கூறினார். “ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் கட்சி கருத்தியல் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. இங்கு கலந்துரையாடப்பட்டது ஒரு புதிய தாராளமய வேலைத்திட்டம். அவர்கள் 40 ஆண்டுகளாக இதுபோன்ற கொள்கைகளை…

  • தென் கொரியா சீனாவின் டீப்சீக்-ஐ செயலிக்கு தடை

    தென் கொரியா சீனாவின் டீப்சீக்-ஐ செயலிக்கு தடை

    சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை…

  • இந்தியா சென்ற மூன்றாவது விமானம் டிரம்ப் இன் நாடுகடத்தல் திட்டம்

    இந்தியா சென்ற மூன்றாவது விமானம் டிரம்ப் இன் நாடுகடத்தல் திட்டம்

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணி முன்னெடுக்கபப்ட்டுள்ள நிலையில், சட்டவிரோத குடியேறிகளுடன் மூன்றாவது விமானம் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்க்ப்படுகின்றது. இதற்கிடையில், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அழைத்து கொண்டு இந்தியாவுக்கு இரண்டு விமானங்கள் வந்துள்ள நிலையில், நேற்று இரவு மூன்றாவது விமானமும் வந்து இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களுக்கு கைகளில் சங்கிலிகள் போடப்பட்டதா? அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவியேற்றதில் இருந்து, சட்டவிரோதமாக குடியிருக்கும் நபர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5ஆம்…

  • இஸ்ரேலிய பிரதமரின் அறிவிப்பு அமெரிக்கா வழங்கிய வெடிகுண்டுகள்

    இஸ்ரேலிய பிரதமரின் அறிவிப்பு அமெரிக்கா வழங்கிய வெடிகுண்டுகள்

    அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் ,அமெரிக்கா காசாவை அபிவிருத்தி செய்யும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தினை பாலஸ்தீனியர்களும், அமெரிக்காவின் சகாக்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ள போதிலும் வேறு விதமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இது உகந்த திட்டம் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள வெடிகுண்டுகள் கிடைத்துள்ள நிலையில் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும்…

  • அமெரிக்காவில் புயலால் இருளில் மூழ்கிய 39 ஆயிரம் வீடுகள்

    அமெரிக்காவில் புயலால் இருளில் மூழ்கிய 39 ஆயிரம் வீடுகள்

    அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், கென்டக்கி என்ற பகுதியில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த வெள்ள அனர்த்தத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல முக்கிய சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதாகவும், 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும்…

  • வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை

    வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை

    ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு தடை வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை…

  • கனடாவில்  தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

    கனடாவில் தேசிய கொடியை பனி படர்ந்த ஏரியில் உருவாக்கிய சிரேஸ்ட பிரஜைகள்

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில சிரேஷ்ட பிரஜைகள் பனி படர்ந்து உறைந்த ஏரியின் மேல் பாரிய அளவிலான தேசியக்கொடியினை வடிவமைத்துள்ளனர். சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் முயற்சி செய்து இந்த தேசிய கொடியின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெலோனாவின் ஹாலிடே பாக் பகுதியில் வசிப்பவர்கள் இந்த கொடியை வடிவமைத்துள்ளனர். தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கொடி நாளை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் பல்வேறு…

  • ரஷ்யா உக்ரைன் போர் போர்களம் செல்லும் பிரிட்டன் படையினர்

    ரஷ்யா உக்ரைன் போர் போர்களம் செல்லும் பிரிட்டன் படையினர்

    ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் , உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ் படையினரை போர்களத்திற்கு அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையின் படி உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டிஸ்படையினரை பயன்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் (Keir Starmer) கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் , எதிர்காலத்தில் மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை தடுப்பதற்கு உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம்…