Author: Menaka Mookandi
-
பேருந்து விபத்தில் தென் அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்டோர் பலி
தென் அமெரிக்காவில் பொலிவியாவின் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் தென்மேற்கு மாவட்டமான யோகல்லாவில் சுமார் 800 மீற்றர் (2625 அடி) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் மருத்துவமனை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். பொலிவியாவின் மலைப்பகுதிகளில் ஆபத்தான சாலைகள் உள்ளன. இந்த விபத்து Potosí மற்றும் Oruro நகரங்களுக்கு இடையே நடந்ததாக…
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கனடாவில் 7வயது சிறுவன் காயம்
கனடாவில் 7வயதான சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளான். கனடாவின் லண்டன் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. லண்டனின் பினான்சார்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு உள்ளேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 44 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் சட்டவிரோதமான முறையில் ஆயுதம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக…
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனடிய மரபுரிமைகள் அமைச்சர் அறிவிப்பு
கனடாவின் மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கல் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. கனடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கூடுதல் நேரத்தை குடும்பத்துடன் கழிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெஸ்கால் லிபரல் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவை என அறிவிப்பு
கனடாவின் மொன்றியலில் பனிப்பொழிவை அகற்றுவதற்கு எட்டு நாட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகர நிர்வாகம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் இரண்டு தடவைகள் பாரிய பனிப்புயல் நகரை தாக்கி இருந்தது. இதனால் நகரத்தின் மீது சுமார் 70 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சுமார் எட்டு நாட்கள் வரையில் தேவைப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பனிப்பொழிவு காரணமாக வீதி போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்…
-
உக்ரைன் – ரஷ்யப் போர் தொடர்பில் சவூதிஅரேபியாவில் பேச்சுவார்த்தை
யுக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க மற்றும் ரஷ்யப் பிரதிநிதிகளுக்கு இடையில் சவூதி அரேபியாவில் இன்று சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேர்மறையான, ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்ததாக ரஷ்ய பிரதிநிதியொருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்படாமையினால் யுக்ரைனின் பிரதிநிதிகள் எவரும் அதில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.…
-
ரொறன்ரோ விமான நிலையத்தில் போக்கவரத்து பாதிப்பு நிலை
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்ததை தொடர்ந்து விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விமானம் சென் போல் நகரிலிருந்து பயணித்த நியைலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் போக்குவரத்து பல மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் காலலையிலும் பியர்சன் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள்…
-
பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் ஒருவர் கைது
பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மியாமியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோர்ட்டெச்சேய் பிரவ்மன் என்ற 27 வயது தனதுவாகனத்திலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதை கண்காணிப்பு கமராக்கள் காண்பித்துள்ளதாக அவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்டுள்ளது. பிரவ்மன் 17 தடவைகள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார், இருவருக்கு காயங்களை ஏற்படுத்தினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட பின்னர் இது குறித்து தெரிவித்துள்ள மோர்ட்டெச்சேய் பிரவ்மன்…
-
பனிப்பொழிவினால் டொரன்டோவில் பயண எச்சரிக்கை
டொரன்டோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன் வியாழன் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல் தாக்கங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. டொரன்டோ பெரும்பாக பகுதியின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இந்த வார இறுதியில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய…
-
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு 29 ஆண்டுகளுக்குப் பின்
பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கிரிக்கெட் மோகம் ஏற்பட்டுள்ள நிலையில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி தொடங்குவதே இதற்குக் காரணம். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம் நாளை முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு…