Author: Menaka Mookandi

  • பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்கள் மோதி விபத்து: இருவர் பலி!

    பயிற்சியில் ஈடுபட்ட இரு விமானங்கள் மோதி விபத்து: இருவர் பலி!

    கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மனிடோபா (Manitoba), ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில் குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில், தெற்கு விமான நிலையம் அருகே இருவரும் விமானத்தைத் தரையிறக்க முயன்றவேளை, 400 மீற்றர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்துக்குள்ளான விமானங்கள் தீப்பிடித்ததில், சம்பவ…

  • செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

    யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி…

  • ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு: ஆட்டம் காணப்போகும் இலங்கை!

    ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு: ஆட்டம் காணப்போகும் இலங்கை!

    இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விகித அறிவிப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி அநுர குமாரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட மேலும் ஏழு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி, அவர்களது நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி கட்டுப்பாடுகள் ஆகஸ்ட்…

  • கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்

    கனடாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு நடைமுறையை ஒத்தி வைக்கும் ட்ரம்ப்

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து…

  • பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : போலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

    பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : போலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

    சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிபி மெதவல அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விசேட பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.எதிரிமான்ன, காலி பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.ஜி.பி.பி…

  • டொரொண்டோ ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை

    டொரொண்டோ ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை

    டொரொண்டோ யோர்க்வில் (Yorkville) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீ வேகமாக அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது. தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இன்னும்…

  • கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    கனடாவின் மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 17.75 டொலர்களாக உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தற்போது உள்ள 17.40 டொலர்களாக செலுத்தும் குறைந்தபட்ச ஊதியத்தை விட 2.4% அதிகரிப்பு ஆகும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஏற்றத்தாழ்வில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பகுதி நேரம், தற்காலிக வேலைகள் மற்றும் குறைந்த ஊதியத்தில் உள்ள பணியாளர்களுக்கு இது நன்மை…

  • மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது

    மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது

    பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் Montreal பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்தமை (Grandparents Scam) தொடர்பாக கைது செய்துள்ளனர். ந்த மோசடியில் 21 மில்லியன் டொலருக்கும் மேல் களவாடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மொன்றியல் (Montreal) அருகிலுள்ள பொயின்டெ கிளெரி என்ட் வாடிவில் டொரியா (Pointe-Claire & Vaudreuil-Dorion) பகுதிகளில் உள்ள கால்செண்டர்களில் இருந்து…

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன், தான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவையான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள டிரம்ப், நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்றும், அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்,…

  • முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது

    முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது

    முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 679 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவப்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை 535 ஆகும். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 63 கடற்படை வீரர்களும் 81 விமானப்படை வீரர்களும் அடங்குவர். கடந்த மாதம் 22…