தனியார் பஸ் விபத்திற்குள்ளானதில் மூவர் காயம்

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று, இன்று அதிகாலை 04:40 மணியளவில், கவிழ்ந்ததாக விபத்துக்குள்ளானது.

பாணந்துறை நகரில் இருந்து சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.