ரணில் மற்றும் மைத்திரி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லான்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி. டோலவத்தே மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரையும் சந்தித்துள்ளனர்.

இது இரண்டாவது சந்திப்பு ஆகும். தற்போதைய அரசாங்கத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் தொடர்பில் தலைவர்கள் கலந்துரையாடப்பட்டது.

அரசியல் கூட்டணி அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவில்லை என தெரியவருகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *