நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகைத்தரும் வாகனங்கள், நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நாடாளுமன்றம் கூடும் தினங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (20) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தரவுள்ளார்.