யாழில் கோவிட் தொற்றால் வெளிநாட்டில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு!

யாழ். மாவட்டத்தில்  நீண்ட காலத்திற்கு பின்னர் கோவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ்  நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோவிட் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான பெண் கோவிட் (COVID 19) கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *